Sunday, September 18, 2011

கருவிழியே......!


Pencil Eye Tutorial




விழியின் நிறமென்னவோ
வெள்ளையும் கருப்பும்தான்.

பார்க்கும் பொருள்களின் நிறங்களோ
பலவித வண்ணங்களில்.

வெண்மையும் கருமையும்
வண்ணங்கள் வழங்கி காட்சியை
விரிப்பது போல்,

உண்மையும் நேர்மையும்
உயரத்தை வழங்கி
உலகத்தை உய்விப்பதெப்போ?

கருவிழியே.....! நீ அறிவாயோ?

25 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு
கருவைச் சொல்லும்
கரு விழிக் கவிதை.

//உண்மையும் நேர்மையும்
உயரத்தை வழங்கி
உலகத்தை உய்விப்பதெப்போ?//

அருமையான வரிகள்! ஆனாலும் அதற்கு
பதிலளிக்க முடியாமல் விழிக்கும் கருவிழியே!!

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

ராமலக்ஷ்மி said...

கேள்விக்கு விடை தெரியாமல் விழிக்கவே செய்யும் கருவிழியும். நல்ல கவிதை.

Rathnavel Natarajan said...

அருமை.

'பரிவை' சே.குமார் said...

'கரு' விழிக் கவிதை.

Yaathoramani.blogspot.com said...

வாழ்வின் வண்ணங்களை அறியத் தருவது
எண்ணங்களின் வண்ணங்களே
வெள்ளத்தனையதுதானே மலர் நீட்டமும்...
உயரிய சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3

மகேந்திரன் said...

உவமை உவமை
அழகிய உவமை கூறி
உங்கள் கருத்தை ஏற்றி கூறியிருக்கிறீர்கள்....
கவிதை வடிவமும் கருத்தும் அழகு.

ரிஷபன் said...

உண்மையும் நேர்மையும்
உயரத்தை வழங்கி..

விழி எழுதிய கவிதை மொழி அழகு.

குறையொன்றுமில்லை. said...

நல்ல கவிதை

மாலதி said...

உண்மையும் நேர்மையும்
உயரத்தை வழங்கி
உலகத்தை உய்விப்பதெப்போ?

கருவிழியே.....! நீ அறிவாயோ?//உங்களின் வினா நியாயமான வினைதான் உண்மையும் நேர்மையும் உயத்தை அடைய வேண்டுமானால் நாம்தான் சில இடங்களில் பகைவரை எதிர்க்கும் வல்லமை பெறவேண்டும் இதற்க்கு நமக்கு நல்ல ஆற்றலும் நல்ல உலபக்குவமும் தேவை பாட்டுகள் நன்றி

middleclassmadhavi said...

காட்சிகளனைத்தும் காண்பித்தும்
கண்ணாடியிலல்லாது பார்க்க இயலாத
கருவிழி! பாவம், எப்படி பதில் சொல்லும்?!

:-)

சாந்தி மாரியப்பன் said...

விழிக்கு தெரியுமோ இல்லியோ!! நான் முழிச்சிட்டிருக்கேன் ;-)

Unknown said...

திருதிரு...

RVS said...

கருவிழியாக இருந்தாலும் இருட்டில பார்க்க முடியாதுல்ல...


கவிதை அருமை!! :-)

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அர்த்தமுள்ள கவிதை ராஜி. வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

இப்போல்லாம் நிறைய பேருக்கு சிகப்பு விழிகள் ஹி ஹி....

சாகம்பரி said...

கருப்பிற்கும் வெள்ளைக்கும் இடையில்தான் அத்தனை நிறங்களும் உள்ளன. அதை உண்மை என்று உரைத்த கவிதை மிக அழகு.

மனோ சாமிநாதன் said...

"நீ வாழக் கற்றாய்
நான் வாழ்க்கை கற்றேன்".

அருமையான வரிகள் ராஜி!

ஆச்சி ஸ்ரீதர் said...

கவிதையும் படமும் சூப்பர்

கே. பி. ஜனா... said...

உவமை அற்புதம்!

ADHI VENKAT said...

நல்லதொரு கவிதை.

”உண்மையும் நேர்மையும்
உயரத்தை வழங்கி
உலகத்தை உய்விப்பதெப்போ?”

உண்மையான வரிகள்.....

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள் சகோ .
நன்றி பகிர்வுக்கு ........

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice one Raji'kkaa

Kanchana Radhakrishnan said...

அருமை.

raji said...

பின்னூட்டமளித்து ஊக்குவித்த அனைவருக்கும் எனது
நன்றி

Post a Comment