Wednesday, April 27, 2011

எந்தையும் தாயும்

திண்னென்ற   தலையணையாய்

தந்தை மடி


மெத்தென்ற பஞ்சணையாய்

தாயின் மடி


சூரியக் கற்றைகளாய்

தந்தைக் கரம்

சந்திரக் கிரணங்களாய்

தாயின் கரம்

ஆகாய விரிவுகளாய்

தந்தை மனம்

பூமியின் தயவினதாய்

தாயின் மனம்

கடலலை ஆரவாரமாய்

தந்தை சிரிப்பு

மழை நீரின் இதமானாதாய்

தாயின் சிரிப்பு

ஆலமர விழுதுகளாய்

தந்தை நட்பு

அழகான மலர் மணமாய்

தாயின் நட்பு

வேரின் உறுதியாய்

தந்தை சொற்கள்

கனியின் சுவையாய்

தாயின் சொற்கள்

எந்தையும் தாயும்

மகிழ்ந்து குலவி

வளர்த்ததும் இவ்வுயிரே 

24 comments:

Yaathoramani.blogspot.com said...

தந்தையையும் தாயையும் இணைத்துச் சென்றவிதமும்
அந்த இணைப்போடு இணைந்து வளரும்
உயிரைச் சொன்னவிதமும்
அருமையாகவும் புதுமையாகவும் இருந்ததது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

பாரதியின் படைப்பில் உள்ளதைப்போல
குலாவ(வி) என இருந்தால் இன்னும்
சிறப்பாக இருக்குமோ

middleclassmadhavi said...

Vadai, bajji etc.?

middleclassmadhavi said...

Differences complimenting each other - azhagaana kavithai!

ராமலக்ஷ்மி said...

அருமை.

மனோவி said...

இயற்கையை தாய் தந்தையோடு ஒப்பிடும் அந்த அழகு நன்றாகவே இருக்கிறது..!

நன்றி நினைவூட்டலுக்கு

RVS said...

சூப்பெர்ப்! எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி... அற்புதமான சொற்றொடர்கள். என்ன லீவு முடிஞ்சு வந்தாச்சா? ;-))

தமிழ் உதயம் said...

மிக அழகாக தாயை, தந்தையை, நேசத்தை கவிதையாக்கி உள்ளீர்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

வெல்கம் பேக் டூ பிளாக் வோர்ல்டு

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்றே பிறந்த மழலையின் எண்ணங்கள் தங்களின் எழுத்துக்களில் புதிதாய் பிறந்து பூத்துக்குலுங்குகின்றன. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

அம்மா அப்பாவுக்கு சமர்ப்பணக்கவிதை?

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

very nice. come back from the holidays?

Nagasubramanian said...

வரிகளின் சேர்க்கை அருமை

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஆணாகவும் பெண்ணாகவும் தந்தையையும் தாயையும் பார்த்த பார்வையும் வார்த்தைகளும் அழகு.

பாலா said...

மிக அருமையான பாசத்தை விதைக்கும் கவிதை.

ADHI VENKAT said...

ரொம்ப அழகா இருக்கு.

ரிஷபன் said...

ஆஹா.. என்ன அழகாய் வார்த்தைகள் அப்படியே குண்டு மல்லிகைச் சரமாய்.. எனக்கு உடனே என் அம்மா ஞாபகம் வேறு வந்து விட்டது.. ஒரு பக்கம் கவிதை அழகில் கிறங்க.. இன்னொரு புறம் லேசான கண்ணீரும் அம்மா நினைப்பில் கலங்க.. அருமையான வாசிப்பு

சக்தி கல்வி மையம் said...

வருக..வருக..

r.v.saravanan said...

இயற்கையை தாய் தந்தையோடு ஒப்பிடும் வார்த்தைகள்
அருமை

எல் கே said...

அருமை :)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. தந்தையுடனும் தாயுடனும் கைக் கோர்த்து செல்வது போல இருந்தது.... பகிர்வுக்கு நன்றி.

விடுமுறை முடிந்து வந்தாயிற்றா?

சாகம்பரி said...

நான் ஆராரோ என்று பாராட்ட இன்னும் யார் யாரோ வந்து தாலாட்ட. அன்னை மட்டுமா புகழ முடியும். குழந்தையும்தான். இனிய இலக்கியம்.

raji said...

@ALL

thanks for the comments

@Rvs
@Vidya subramaniyam
@Venkat Nagaraj

leave mudiyalai.naduvula kidaicha
gap la Rangamaniyoda laptop la type
pannina posst idhu

இராஜராஜேஸ்வரி said...

உயிரின் இனிமைக்கு உருகொடுத்த கவிதைக்குப் பாராட்டுகள்.

Post a Comment