கும்மிருட்டில் முள் நகர்த்தி
குரல் தரும் கடிகாரம்,
மேலே ஓடும் மின்விசிறியின்
மெல்லிய ஓசை,
எங்கோ எதற்கோ குரல்
எழுப்பி அழும் குழந்தை,
எந்த சத்தமானால் என்ன?
எதுதான் உன்னுடைய
மௌனத்தை மொழி பெயர்க்கும்?
நீண்ட இரவுக்குப் பின்
நீளும் சூரியக்கதிருக்காய்
நிதமும் காத்திருப்பது போல்,
நீயும் உன் வார்த்தைக்கதிர்
நீட்டி ஒளி தருவாய் என
நானும் காத்திருப்பேன்.
இந்த கவிதை 'வல்லமையில்' செப்.26 அன்று வெளியாகி உள்ளது
குரல் தரும் கடிகாரம்,
மேலே ஓடும் மின்விசிறியின்
மெல்லிய ஓசை,
எங்கோ எதற்கோ குரல்
எழுப்பி அழும் குழந்தை,
எந்த சத்தமானால் என்ன?
எதுதான் உன்னுடைய
மௌனத்தை மொழி பெயர்க்கும்?
நீண்ட இரவுக்குப் பின்
நீளும் சூரியக்கதிருக்காய்
நிதமும் காத்திருப்பது போல்,
நீயும் உன் வார்த்தைக்கதிர்
நீட்டி ஒளி தருவாய் என
நானும் காத்திருப்பேன்.
இந்த கவிதை 'வல்லமையில்' செப்.26 அன்று வெளியாகி உள்ளது
29 comments:
எப்போதும் காத்திருப்பதே ஒரு சாராரின் தாபமாகவும்
எப்போதும் காக்கவைப்பதே மற்றொரு சாராரின் சாபமாகவும் உள்ளதை கவிதாயினியாகிய தாங்கள் வெகு அழகாக எழுதியுள்ளீர்கள்.
கடைசியில் எப்படியாவது‘மெள்னத்திற்கு விடிதல்’ வந்தால் சரிதான்.
எழுத்தில் வல்லமை பொருந்திய தங்களின் இந்தப் படைப்பு “வல்லமை” யில் வெளி வந்துள்ளது நல்லப் பொருத்தமே. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk
[Voted 1 to 2 in Indli & Tamilmanam]
கவிதை ஜூப்பரா இருக்கு ராஜி.. இன்னும் நிறைய எழுதுங்க :-)
>>எந்த சத்தமானால் என்ன?
எதுதான் உன்னுடைய
மௌனத்தை மொழி பெயர்க்கும்?
குட் ஒன்
சவால் சிறுகதைப்போட்டி அறிவிச்சிருக்காங்க.. கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்
நல்ல கவிதை
//
நீயும் உன் வார்த்தைக்கதிர்
நீட்டி ஒளி தருவாய் என
நானும் காத்திருப்பேன்.
//
அருமையான வரிகள்
அழகான கவிதை
இன்று என் வலையில் ...
இது நியாயமா ? யாராவது பதில் சொல்லுங்கள்.
tamailmanam 5 th vote
அருமையான கவிதை மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் .இன்று என் தளத்தில் புதிய பக்திப் பாடல் வரிகள் உள்ளது அத்துடன் இன்னும் ஒரு விடயம் காத்திருக்கு முடிந்தால் தவறாமல் வாருங்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ..........
வலைச்சரத்தின் வழியாக உங்கள் வலைத்தளத்திற்கு எனது வருகை. நல்ல கவிதை. வாழ்த்துகள்.
உறவுகள் தொடர்கதை- சிறுகதையை பதிவர்களுக்கென்றே வெளிவரும் பதிவர் தென்றல் மாத இதழில் வெளியிட விருப்பம். தங்களின் அனுமதி தேவை.தங்களின் அனுமதியை எனது மெயிலுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.thambaramanbu@gmail.com
நல்ல கவிதை. வல்லமையில் வெளி வந்ததற்கு வாழ்த்துகள்....
நீயும் உன் வார்த்தைக்கதிர்
நீட்டி ஒளி தருவாய் என
நானும் காத்திருப்பேன்.
கவிதைக்கரம் நீண்டு ஒளி தந்து விட்டது.. அழகாய்
அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.
வல்லமை பொருந்திய வரிகள்!
வாழ்த்துக்கள்!
அருமையான வரிகள்!
அழகிய கவிதை!
வல்லமையில் வெளி வந்ததற்கு இனிய வாழ்த்துக்கள் ராஜி!
அருமையான வரிகள்!
அழகிய கவிதை!
வல்லமையில் வெளி வந்ததற்கு இனிய வாழ்த்துக்கள் ராஜி!
சகோ நல்ல கவிதை!
அருமையா இருக்கு வாழ்த்துக்கள் ராஜி...!!!
பேஷ், பேஷ்!
வழ்த்துக்கள்!
நீர் அதிகம் சேரச் சேர உடைபடும் மடைபோல்
அதீத அன்பின் பெருக்கில் மௌனம்
உடைபடவே செய்யும்.ஆயினும்
அதற்குள் மடைபடும் அவதி
அனுபவித்தால்தான் புரியும்
அதை மிக அழகான படைப்பாக்கித்
தந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 16
த.ம 11
/எந்த சத்தமானால் என்ன?
எதுதான் உன்னுடைய
மௌனத்தை மொழி பெயர்க்கும்?/
அழகிய வரிகள். அருமையான கவிதை.
சீக்கிரம் பேசிடுங்கப்பா. மௌனத்திற்கு மொழி பெயர்க்க முயற்சிக்கும் கவிதை அருமை. வாழ்த்துக்கள் ராஜி!
மின்விசிறியின் மெல்லிய இசை?
வார்த்தைக்கதிர் நல்லாயிருக்கு... :-)
wow..short and sweet akka...
நீயும் உன் வார்த்தைக்கதிர்
நீட்டி ஒளி தருவாய் என
நானும் காத்திருப்பேன்.//
அருமை. வாழ்த்துக்கள்
என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (1/11/11 -செவ்வாய் கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com
Post a Comment