Friday, April 13, 2012

விஷுக்கனி

இன்று வல்லமை புத்தாண்டுச் சிறப்பிதழில் வெளியான எனது படைப்பு.

வ்ல்லமை ஆசிரியர் குழுவிற்கு எனது நன்றிகள்



நாட்கள் சேர்ந்து மாதம் பிறக்கின்றது
மாதங்கள் சேர்ந்து வருடம் பிறக்கின்றது.
நிமிடங்களில் நொடிகளும்
மணிகளில் நிமிடங்களும் 
நாட்களில் மணிகளும் மறைகின்றது
என்றால்,
எது பிறக்கையில் மனித
பகை மறையும்?
எது பிறக்கையில் மனித
வளம் பெருகும்?
எது பிறக்கையில் நம்
பொறாமைகள் அழியும்
அன்பு!!!!!!
ஆம்!
பிறக்கும் வருடங்களில், நாட்களில்,
மணிகளில், நிமிடங்களில். நொடிகளில்
பூக்கும் அன்பைக் கொண்டாடுவோம்
பண்டிகை போல!!!!
பூவையும் கனியையும்
மட்டும் காணாமல்
பூத்த அன்பை கனிய விட்டு
சமமாகக் காண்போம் அனைவரையுமே -
விஷுக்கனியாக.
விஷு(சமம்) கனி (காணுதல்)



28 comments:

Yaathoramani.blogspot.com said...

கருவும் படைப்பும் மிக மிக நேர்த்தி
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

பூவையும் கனியையும்
மட்டும் காணாமல்
பூத்த அன்பை கனிய விட்டு
சமமாகக் காண்போம் அனைவரையுமே -
விஷுக்கனியாக.

இதயம் கனிந்த இனிய நல்வாழ்த்துகள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிய ‘நந்தன’ புத்தாண்டு + விஷுக்கனி வாழ்த்துகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

’வல்லமை’ மின்இதழ் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படத்தில் காட்டப்பட்டுள்ள பழங்கள்
யாவும் அழகாகவும் இயற்கையாகவும்
உள்ளன.

வை.கோபாலகிருஷ்ணன் said...

”அன்பு” என்னும் மந்திரச்சொல்லைப்பற்றி வெகு அழகாகவே சொல்லியுள்ளீர்கள்.

//பூத்த அன்பை கனிய விட்டு சமமாகக் காண்போம் அனைவரையுமே - விஷுக்கனியாக.//

முதலில் பூக்கும் அன்பு, அதன்பிறகு அழகாகக் கனிய வேண்டும், என்பது மிகவும் அழகான வரிகள். எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

//விஷு(சமம்) கனி (காணுதல்)//

அற்புதமான விளக்கம்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

குறையொன்றுமில்லை. said...

இனிய நந்தன வருட தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

middleclassmadhavi said...

//பிறக்கும் வருடங்களில், நாட்களில்,
மணிகளில், நிமிடங்களில். நொடிகளில்
பூக்கும் அன்பைக் கொண்டாடுவோம்
பண்டிகை போல!!!!//

சபாஷ்! அருமை!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

vimalanperali said...

பிறந்த வருடத்திலிருந்தாவது கனிகளை நேசிக்க கற்றுக்கொள்வோம்.

ரிஷபன் said...

பூத்த அன்பை கனிய விட்டு
சமமாகக் காண்போம் அனைவரையுமே -

அன்பின் வாழ்த்துகள்.

விச்சு said...

வாழ்க்கையை நேசிப்போம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

/அன்பைக் கொண்டாடுவோம்
பண்டிகை போல!!!!/

நிச்சயமாக. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

மனோ சாமிநாதன் said...

/பூவையும் கனியையும்
மட்டும் காணாமல்
பூத்த அன்பை கனிய விட்டு
சமமாகக் காண்போம் அனைவரையுமே -
விஷுக்கனியாக./

அருமையான வரிகள் ராஜி!

வெங்கட் நாகராஜ் said...

//எது பிறக்கையில் நம்
பொறாமைகள் அழியும்
அன்பு!!!!!!//

//பூத்த அன்பை கனிய விட்டு
சமமாகக் காண்போம் அனைவரையுமே -//

இனிய படைப்பு... வாழ்த்துகள் ராஜி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பால கணேஷ் said...

அருமையான படைப்பு. அன்பு பெருகட்டும். தங்களுக்கு என் இதயம் நிறை நந்நன தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

krishy said...

அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ் போஸ்ட்

To get vote button


தமிழ் போஸ்ட் Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

ADHI VENKAT said...

அருமையான வரிகள். புத்தாண்டு வாழ்த்துகள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அருமை ராஜி.

கோமதி அரசு said...

பிறக்கும் வருடங்களில், நாட்களில்,
மணிகளில், நிமிடங்களில். நொடிகளில்
பூக்கும் அன்பைக் கொண்டாடுவோம்
பண்டிகை போல!!!!//

அருமையான கவிதை.
அன்பைக் கொண்டாடுவோம்.

தக்குடு said...

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராஜி அக்கா :)

RVS said...

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராஜி அக்கா :)

தக்குடுவிடமிருந்து காப்பி செய்து போட்டுள்ளேன்.

கவிதை எழுதத் தெரியாதவன் எப்படி கமெண்ட் போடுவான்? :-)

Anonymous said...

//எது பிறக்கையில் மனித
பகை மறையும்?
எது பிறக்கையில் மனித
வளம் பெருகும்?
எது பிறக்கையில் நம்
பொறாமைகள் அழியும்
அன்பு!!!!!!//

அரவணைக்கும் அன்பும் மன்னிக்கும் பண்பும் மட்டுமே மனித நேயத்தை காக்கும் ..வரிகள் நன்று .. அன்பு சகோதரி

மாலதி said...

அருமையான கவிதை.

Anonymous said...

//பூவையும் கனியையும்
மட்டும் காணாமல்
பூத்த அன்பை கனிய விட்டு
சமமாகக் காண்போம் அனைவரையுமே -
விஷுக்கனியாக.
விஷு(சமம்) கனி (காணுதல்)//

அருமையான கவிதை.அன்பைக் கொண்டாடுவோம்.
நான் இப்பொழுதுதான் பார்த்தேன் உங்களின் பதிவை. மிகவும் அற்புதம்....

Anonymous said...

நான் இப்பொழுதுதான் பார்த்தேன் உங்களின் பதிவை. மிகவும் அற்புதம்....

Unknown said...

எல்லோர் மனங்களிலும் இது போன்ற எண்ணம் தோன்றினால் உலகே அமைதிப் பூங்கா ஆகிவிடும்.

நல்ல சிந்தனை

வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

27.12.2012 அன்று வலைச்சரத்தில் இந்த தங்களின் பதிவு பற்றி திருமதி உஷா அன்பரசு என்பவர்களால் பாராட்டிப் பேசப்பட்டுள்ளது.

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள். VGK

Post a Comment