Tuesday, June 21, 2011

அழகு

கறுப்பென்றும் சிவப்பென்றும்
நிறங்களுண்டு 
கண்ணழகு மூக்கழகு என்றே
வர்ணனைகளும் உண்டு

நடையழகு உடையழகு
வார்த்தைகளுண்டு
நல்ல உயரமென்றும் குட்டையென்றும்
விமர்சனமுண்டு

பேச்சழகு சொல்லழகு
வியத்தல் உண்டு
பல் வரிசையும் பார்வையுமே
அழகென்பதுண்டு

அகத்தோற்ற அழகுச்சுடராம்
அன்பின் முன்
புறத்தோற்ற விட்டில்கள்
பொசுங்கிடாதோ?

29 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நீண்ட இடைவெளிக்குப்பின்
மீண்டும் வருகை தந்திருக்கும் தங்களை
வருக! வருக!! வருக!!!
என அன்புடன் வரவேற்கிறோம்.

//அகத்தோற்ற அழகுச்சுடராம்
அன்பின் முன்
புறத்தோற்ற விட்டில்கள்
பொசுங்கிடாதோ?//

நிச்சயம் பொசுங்கிடும். ஆனால் அகத்தோற்ற அழகுச்சுடர் என்ற அன்பை அறியவிடாமல், புறத்தோற்ற மாயைகள் மறைத்துக்கொண்டே இருக்ககூடும்.

நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

மதுரை சரவணன் said...

iththanai alakum irukkum pothu eppadi posungkaamal irukka mudiyum... vaalththukkal

kowsy said...

அன்பே அழகென்று புரிந்தும் ஏனோ அழகுக்காய் அலைவார்தாம் எத்தனை எம்மத்தியில். வாழ்த்துகள்

எல் கே said...

மீண்டும் வருக. அழகை பற்றி நல்லக் கவிதை

Yaathoramani.blogspot.com said...

நீண்ட மௌனத்திற்குப் பின் சொல்லும்
சொற்களில்ஆழம் அதிகம் இருக்கும்
தங்கள் அழகு கவிதையைப் போன்றே
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

மிக நன்று.

குறையொன்றுமில்லை. said...

கவிதை மிக, மிக அழகோ அழகு.

RVS said...

அழகு..அழகு.... கவியழகு... ;-))

sathishsangkavi.blogspot.com said...

அழகைப்பற்றி ஓர் அற்புதமான கவிதை...

வெங்கட் நாகராஜ் said...

நீண்டதோர் இடைவெளிக்குப் பின் அழகைப் பற்றிய அழகான கவிதையுடன் வந்து இருக்கீங்க!

//அகத்தோற்ற அழகுச்சுடராம்
அன்பின் முன்
புறத்தோற்ற விட்டில்கள்
பொசுங்கிடாதோ? //

இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.

சக்தி கல்வி மையம் said...

நீண்ட இடைவெளிக்கு பின் கவிதையோட வந்திருக்கும் தோழிக்கு வாழ்த்துக்கள்..

vidivelli said...

பேச்சழகு சொல்லழகு
வியத்தல் உண்டு
பல் வரிசையும் பார்வையுமே
அழகென்பதுண்டு
very nice"
supper"
congratulation"

A.R.ராஜகோபாலன் said...

வார்த்தைகள் அத்தனையும்
ரத்தினம் பதித்த
முழு முத்துக்கள்
கவிதையில்
அழகாய் சொன்ன
அழகிய பாங்கு
அற்புதம்

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
நீண்ட நாட்களாக எழுதவில்லை.
நல்வரவு.

ADHI VENKAT said...

நீண்ட விடுமுறைக்கு பின் இப்படியொரு அழகான கவிதை. பாராட்டுக்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ஹாய் ராஜி வந்தாச்சா? கவிதை அழகு.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

முன்னுரை, முகவுரை பற்றி நீயும் தொடரலாமே.

சாகம்பரி said...

அகத்தின் அழகு மிக அழகு. Greetings Raji

சி.பி.செந்தில்குமார் said...

வெல்கம் பேக் டூ படைப்புலகம்

சி.பி.செந்தில்குமார் said...

>>அகத்தோற்ற அழகுச்சுடராம்
அன்பின் முன்
புறத்தோற்ற விட்டில்கள்
பொசுங்கிடாதோ?

nice

கவி அழகன் said...

நிச்சயமாக

'பரிவை' சே.குமார் said...

அழகை பற்றி நல்லக் கவிதை.

ரிஷபன் said...

அகத்தோற்ற அழகுச்சுடராம்
அன்பின் முன்
புறத்தோற்ற விட்டில்கள்
பொசுங்கிடாதோ?
அடடா.. சபாஷ்!

கே. பி. ஜனா... said...

சொல்லழகும் பொருளழகும் கொண்ட நல்ல ஒரு கவிதை!

குணசேகரன்... said...

இன்றுதான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.

அகத்தோற்ற அழகுச்சுடராம்
அன்பின் முன்
புறத்தோற்ற விட்டில்கள்
பொசுங்கிடாதோ?//அழகான நடையிலும், எழுத்திலும் எழுதியிருக்கிறீங்க..சூப்பர்..
where is follower button?

http://zenguna.blogspot.com/

கருணாகார்த்திகேயன் said...

நல்ல கவிதை
தொடருங்கள் ...

அன்புடன்
கருணா கார்த்திகேயன்
http://karunakarthikeyan.blogspot.com

raji said...

பின்னூட்டமளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
தொடர்ந்த ஊக்கத்திற்கும் நன்றிகள்

@வித்யா சுப்ரமணியம்

தொடர்கிறேன் மேடம்

Yaathoramani.blogspot.com said...

தனது படைப்புக்கு வாசகனை மனரீதியாக தயார் செய்யவும்
எழுதியதற்கான காரணத்தைச் சொல்லவும்
படைப்பில் சொல்லமுடியாத பிற காரணங்களை சொல்வதற்காகவும்
பெரும்பாலும் முன்னுரையை எழுத்தாளர்கள் பயன்படுத்துகிறார்கள்
குறிப்பாக ஜெயகாந்தன் அவர்களின் முன்னுரை
கதைகளைப் போன்றேஅத்தனை சுவையுடையது
தங்கள் இந்தப் பதிவின் தரம் நீங்கள் இதற்காக
எவ்வளவு சிரமம் எடுத்துக்குக் கொண்டிருப்பீர்கள் என புரிந்து கொள்ள முடிகிறது
தரமான பதிவு வழக்கம்போல
(தங்கள் பதிவிக்குள் கூகுள் மூலம் வர அதிக நேரம்
பிடிக்கிறது எஃஸ்ப்ளோாரர் மூலம் நுழைந்து
பின்னூட்டம் இட்டுள்ளேன்)

மாய உலகம் said...

அகத்தோற்ற அழகுச்சுடராம்
அன்பின் முன்
புறத்தோற்ற விட்டில்கள்
பொசுங்கிடாதோ?

புறத்தோற்றத்தை தானே... பார்க்கிறார்கள்..
அன்பெனும் அழகான அகத்தோற்றத்தை எங்கே பார்க்கிறார்கள்.....
அற்புதமான வரிகாளைவுடைய ஆதங்க கவிதை....

Post a Comment